Thursday, March 28, 2024
Home » பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க ஐ.ம.ச. யினர் சிலர் தயார்

பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க ஐ.ம.ச. யினர் சிலர் தயார்

by gayan
November 4, 2023 7:10 am 0 comment

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உட்பட நாட்டுக்கான சிறந்த யோசனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகவுள்ளதாக தெரிவித்தது. இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் இதனை அறிவிக்க அக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் சப்ரகமுவ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுகேகொடை இல்லத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது, இந்த விடயம் முதன்முறையாக கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தென்மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஆணையாளரும் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதால், வரவு -செலவுத் திட்டத்தில் சிறந்த யோசனைகள் முன்வைக்கப்படுமானால், அதற்கு எதிர்ப்பு வெளியிட்டால், கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT