Home » ஹமாஸ் கடத்திச் சென்ற இலங்கையர் உயிரிழப்பு

ஹமாஸ் கடத்திச் சென்ற இலங்கையர் உயிரிழப்பு

இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு

by gayan
November 4, 2023 6:28 am 0 comment

ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.

இலங்கையைச் சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர என்பவர் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்தனர். தமது இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதி செய்துள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

சுஜித் பண்டார யட்டவரவினுடைய பிள்ளைகளின் மரபணுவை எடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்திய

பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தூதரகம் தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை மேற்கொண்ட போது, இலங்கையர் ஒருவர் காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து அடையாளம் காணப்படாத உடலொன்றை, சுஜித் பண்டாரவினுடைய பிள்ளைகளின் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை செய்த போதே, அது இலங்கையரினது உடலென்பது உறுதியானது.

வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர, கடந்த 2015 இல் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்றிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT