ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்காக வரி வருவாயை பலஸ்தீன அதிகாரசபைக்கு தொடர்ந்து வழங்கும் இஸ்ரேல் காசாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
பலஸ்தீன அதிகாரசபை பொதுத் துரை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது மற்றும் மின்சார செலவுகளுக்காக இந்த நிதி தேவைப்படுகிறது என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால அமைதி உடன்படிக்கையின் ஓர் அங்கமாக பலஸ்தீனர்கள் சார்பில் வரி சேகரிக்க இஸ்ரேலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதோடு வழக்கமாக அந்த நிதி இஸ்ரேலிய நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் மாதாந்தம் பலஸ்தீன அதிகாரசபைக்கு பரிமாற்றப்படுகிறது.
இதன் அண்மைய பரிமாற்றம் ஒக்டோபர் முடிவில் இடம்பெறவிருந்தது. பலஸ்தீன அதிகாரசபை ஹமாஸுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிச் இந்த நிதியை நிறுத்தி வைத்திருந்தார்.