Wednesday, January 10, 2018 - 10:03am
(வைப்பக படம்)
தெவுந்தர கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று (09) இரவு 11.30 மணியளவில் மீனவர்களுடன் சென்ற படகொன்று, கப்பல் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பலியான இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய மூவர் கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
Add new comment