Wednesday, April 24, 2024
Home » தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

by Prashahini
November 3, 2023 2:22 pm 0 comment

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய ராமையா மனோகர் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹட்டன் இ.போ.ச டிப்போவில் பணிபுரிந்து வருவதாகவும், நான்கு நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் தோட்டத்திற்கு அருகில் ஹட்டன் ஓயாவில் பாயும் ஆற்றுப்பகுதியில கண்டெடுக்கப்பட்ட சடலத்தை நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்குச் கொண்டுச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT