Thursday, April 25, 2024
Home » ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரங்கள் அதிகரிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரங்கள் அதிகரிப்பு

-வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும்

by sachintha
November 3, 2023 7:02 am 0 comment

நாட்டின் தேர்தல் முறைமையை எவ்வாறு மாற்றுவது என்பதை ஆராய்வதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களை, அதிகரிப்பதற்கு இன்று (03) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளார். இந்த ஆணைக்குழுவில், எவரும் சென்று தேர்தல் முறை எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க முடியுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஆணைக்குழுவில், தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT