Friday, April 19, 2024
Home » காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்

காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்

-பிரதமர் தினேஷ் உறுதி

by sachintha
November 3, 2023 6:19 am 0 comment

காணி உரிமை மற்றும் ஏனைய காணிப் பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

புதிய கிராமம் – புதிய நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் குணவர்த்தன, விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கைக்கும் உதவும் வகையில் காணிப்பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மேம்படுத்தி விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல தொழில்நுட்ப உதவி மற்றும் இயந்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT