Friday, March 29, 2024
Home » அவசர மருந்து கொள்வனவை இடைநிறுத்த அமைச்சர் பணிப்பு

அவசர மருந்து கொள்வனவை இடைநிறுத்த அமைச்சர் பணிப்பு

- பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும் அவசர மருந்துக் கொள்வனவை

by Rizwan Segu Mohideen
November 2, 2023 8:12 am 0 comment

தட்டுப்பாடின்றி மருந்து கையிருப்பை பேணவும் இடைநிறுத்துமாறும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, பதிவு செய்யப்பட்ட மருந்துகள் இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் அந்த மருந்துகள் தொடர்பில் தேவையான தரவுகளைப் பெற்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அனுமதியுடன் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை அரசாங்க மருந்துக்கூட்டுத்தாபனம், அரசாங்க மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ சேவைகள் பிரிவு ஆகியவை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சினால் பின்பற்றப்படும் மேற்படி முறைமையை மீறி எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவசர மருந்துக் கொள்வனவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டாலும், தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை உரிமை முறைமையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புற்றுநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உபயோகப்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில், விசேட கவனம் செலுத்தி அந்த மருந்துகளை தட்டுபாடின்றி கையிருப்பில் வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT