Home » சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு

சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு

- குற்றவாளிக்கு 25 வருட கடூழிய சிறை

by Prashahini
November 1, 2023 9:34 am 0 comment

  12 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு தண்டனை

தனது 44 வயதில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தற்போது 66 வயதான குற்றவாளி ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதவான் 25 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார் எம்பிலிப்பிட்டிய செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

2011 ஆண்டு சிறுமி மீது குறித்த நபர் பல முறை பாலியல் வன்முறை ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு தொடரப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். தீர்ப்பினை வழங்கிய நீதவான் புத்திக சீராகல சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டையும், 25,000 ரூபா அபராதத்தையும் வழங்குமாறும் தீர்ப்பளித்தார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT