301
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று (31) இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.
தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் தமிழர் பிரச்சினை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இதுவரை இரத்துச் செய்யப்படாமலிருப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.