350
யாழ். கொடிகாமம்- பருத்தித்துறை பயணிகள் பஸ்ஸொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (31) காலை முள்ளிப் பகுதியில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. பயணிகளுடன் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ், சாரதியின் நித்திரைத் தூக்கம் காரணமாக தரம்புரண்டு விபத்துக்குள்ளானதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது சில பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. எனினும், பஸ் தடம் புரண்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
நாகர்கோவில் விஷேட, யாழ். விசேட நிருபர்கள்