Thursday, March 28, 2024
Home » நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

- SINOPEC நிறுவனமும் அதே விலையில் எரிபொருள் விலைகளை திருத்தியது

by Rizwan Segu Mohideen
October 31, 2023 10:28 pm 0 comment

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 365 இலிருந்து ரூ. 356
  • பெற்றோல் 95: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 420 இலிருந்து ரூ. 423
  • ஒட்டோ டீசல்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 351 இலிருந்து ரூ. 356
  • சுப்பர் டீசல்: ரூ. 10 இனால் அதிகரிப்பு – ரூ. 421 இலிருந்து ரூ. 431
  • மண்ணெண்ணெய்: ரூ. 7 இனால் அதிகரிப்பு – ரூ. 242 இலிருந்து ரூ. 249

இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலையில் தமது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

SINOPEC

  • பெற்றோல் 92: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 358 இலிருந்து ரூ. 356
  • பெற்றோல் 95: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 420 இலிருந்து ரூ. 423
  • ஒட்டோ டீசல்: ரூ. 8 இனால் அதிகரிப்பு – ரூ. 348 இலிருந்து ரூ. 356
  • சுப்பர் டீசல்: ரூ. 14 இனால் அதிகரிப்பு – ரூ. 417 இலிருந்து ரூ. 431

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT