Thursday, March 28, 2024
Home » போலி ஆவணங்களை சமர்ப்பித்து தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி

போலி ஆவணங்களை சமர்ப்பித்து தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி

உயரதிகாரிகள் மூவருக்கு பயணத்தடை

by mahesh
November 1, 2023 6:03 am 0 comment

போலி ஆவணங்களை சமர்ப்பித்து தரமற்ற நோயெதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில்,

அமைச்சின் உயர் பதவியிலுள்ள மூவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசியை நாடளாவிய ரீதியில் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கும் இவர்கள் வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில், சுகாதார அமைச்சின் உயர் பதவியில் உள்ள இருவர் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடை செய்து மாளிகாகந்தை மஜிஸ்திரேட் நீதவான் லோச்சனா அபேவிக்கிரம நேற்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடைக்கு உட்பட்டுள்ளவர்களுள் மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு பணிப்பாளர்டாக்டர் கபில விக்கிரமநாயக்க மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிறுவனத்தின் அதிகாரிகள் சுகத் ஜனக்க பெர்னாண்டோ என்ற பெயருடைய அருண தீப்தி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT