Thursday, April 25, 2024
Home » உணவுப் பற்றாக்குறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்; அரிசியில் தன்னிறைவு

உணவுப் பற்றாக்குறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்; அரிசியில் தன்னிறைவு

by mahesh
November 1, 2023 6:01 am 0 comment

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மேலும் தெரிவிக்கையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை அரசாங்கம் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT