178
கொத்மலை மற்றும் வலப்பனை பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று கொத்லை காமினி திசாநாயக்கா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலையின் ஆரம்பப்பிரிவு தொடக்கம் உயர்தரம்வரை கல்வி மற்றும் மனப்பாங்கு வளர்ச்சி எனும் வேலைத்திட்டமே ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.
தம்சவிய எனும் சர்வதேச தொண்டர் அமைப்பு இதற்கான அனுசரணையை வழங்குவதுடன், இது பொதுசவிய வேலைத்திட்டமெனவும் அழைக்கப்படுகின்றது.