Home » மாநில செயல் தலைவர் நாளை இலங்கை வருகிறார்
தமிழ்நாடு சிவசேனா அமைப்பின்

மாநில செயல் தலைவர் நாளை இலங்கை வருகிறார்

by mahesh
November 1, 2023 9:00 am 0 comment

தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க. சசிகுமார் ஜீ நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு நாளை (02) இலங்கை வருகிறார்.

பிரம்மரிஷ மலை அன்னைச்சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் உட்பட தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், குருமகா சன்னிதானங்கள், ஞானவான்கள், சித்தர்கள், சிவாச்சாரியார்கள் உட்பட பலரதும் அன்புக்குரிய இவர், கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, களுத்துறை ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு வஸ்திர தானம் வழங்குவதற்காக தமது குழுவினருடன் இன்று இலங்கை வருகின்றார்.

இலங்கை மக்கள் பொருளதார ரீதியில் பாதிக்கப்பட்டு துயருற்ற நிலையில் அவர்களுக்கு அருள் வேண்டியும், ஆசி வேண்டியும் தமிழகத்தில் யாகங்கள் நடத்தியவர். பழனி புலிப்பாணிச் சித்தருடன் இணைந்து கதிர்காமத்திலும், அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளுடன் இணைந்து மட்டக்களப்பிலும் யாக பூஜைகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயப்பணிகள் செய்து வருகிறாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT