236
தென்மராட்சி – கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செல்வரத்தினம் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கைதடியிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளும் சிறுவர்களும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
சாவகச்சேரி விசேட நிருபர்