ராஜகிரியை ஒபயசேகரபுர அல் மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலின் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா ஒபயசேகரபுர வரவேற்பு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) பள்ளிவாசலின் தலைவர் எம்.ஆர்.எம். அர்ஷாட் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் மெளலவி ஹஸன் பரீட் கலந்து சிறப்பித்தார். கெளரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் பிரதிநிதியாக வக்பு பிரிவு பிரதம அலுவலர் ஏ.எஸ்.எம்.ஜாவித், வக்பு சபையின் செயலாளர் கே.ஆர். மொஹமட்,
விவாகப் பதிவாளர் மெளலவி எம்.ஜே.எம்.றியால், மெளலவி அஹமட் இக்பால், மெளலவி ரமீஸ், உட்பட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், மத்ரஸா ஆசிரியர்கள், உலமாக்கள், பள்ளிவாசலின் முன்னாள் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கசீதாக்கள், அறபு எழுத்து இலக்கண பாடல்கள், நாடகங்கள் என்பன இடம் பெற்றன.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் அதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்