290
இலங்கைக்கு வந்துள்ள உலக வங்கிக் குழுவினர், நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர். உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.
அவருடன், உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
(யாழ்.விசேட நிருபர்)