Friday, April 19, 2024
Home » தொடர்ச்சியாக நீர்ப் பம்பி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது

தொடர்ச்சியாக நீர்ப் பம்பி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது

- 5 நீர்ப் பம்பிகள் மீட்பு

by Prashahini
October 31, 2023 11:17 am 0 comment

வடமராட்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நீர்ப் பம்பி (Water Pump) திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 5 நீர்ப் பம்பிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பல இடங்களில் தொடர்ச்சியாக நீர்ப் பம்பி மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன. இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தபோதுமறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 நீர்ப் பம்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் விஷேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT