Thursday, March 28, 2024
Home » எட்டு வயது சிறுவனை தடியால் தாக்கிய மௌலவி கைது

எட்டு வயது சிறுவனை தடியால் தாக்கிய மௌலவி கைது

- முறையாக குர்ஆன் ஓதாத காரணத்தினால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

by Prashahini
October 31, 2023 10:43 am 0 comment

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் எட்டு வயது சிறுவனைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (28) இரவு இந்தச் சிறுவனைத் தடியால் தாக்கிய நிலையில் நேற்று (30) கைதான மௌலவி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது 50,000 இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குர்ஆன் பாடசாலையில் கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் குறித்த சிறுவன் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT