மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் எட்டு வயது சிறுவனைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (28) இரவு இந்தச் சிறுவனைத் தடியால் தாக்கிய நிலையில் நேற்று (30) கைதான மௌலவி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது 50,000 இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குர்ஆன் பாடசாலையில் கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் குறித்த சிறுவன் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்