Thursday, April 25, 2024
Home » சாரதியின் நித்திரை காரணமாக தடம்புரண்ட பஸ்

சாரதியின் நித்திரை காரணமாக தடம்புரண்ட பஸ்

by Prashahini
October 31, 2023 9:48 am 0 comment

கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பஸ்ஸொன்று இன்று (31) காலை முள்ளிப்பகுதியில்வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

பயணிகளுடன் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை சாரதியின் நித்திரை காரணமாக பஸ் தடம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT