Home » வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சா மீட்பு

வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சா மீட்பு

- 2 கோடி மதிப்பு; கடற்படை அதிரடி

by sachintha
October 31, 2023 8:10 am 0 comment

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய வல்வெட்டித்துறை – ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட பொதியொன்றிலிருந்து 50 கிலோகிராம் நிறையுடைய குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் அடங்கிய பொதி மேலதிக விசாரணைகளுக்காக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

(யாழ். விசேட, நாகர்கோவில் விசேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT