Thursday, March 28, 2024
Home » உரங்களுக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை!

உரங்களுக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை!

- நிர்ணயிப்பதில் அரசு தீவிர கவனம்

by sachintha
October 31, 2023 7:35 am 0 comment

உரங்களுக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உர விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட தேடல்கள் மற்றும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நவீன விவசாய தொழில்நுட்ப செயலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT