எட்டு அணிகள் பங்கேற்கும் 2025 சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு போட்டியை நடத்தும் பாகிஸ்தானுடன் இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத்தில் முதல் ஏழு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிபெறவுள்ளன.
இதற்கான ஒப்புதல் 2021 ஐ.சி.சி சபை கூட்டத்தில் கிடைத்திருந்ததாக ஐ.சி.சி. பேச்சாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆடும் பின்னடைவை சந்தித்த மற்றும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத சில கிரிக்கெட் சபைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்திற் தகுதி பெறாத ஐ.சி.சி. முழு அங்கத்துவ நாடுகளான மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளன.
அடுத்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.