Friday, March 29, 2024
Home » மேல், சப்ரகமுவ மாகாணங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைக்கு எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைக்கு எதிர்பார்ப்பு

- பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை

by Prashahini
October 30, 2023 8:50 am 0 comment

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று (30) பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT