இன்றையதினம் (29) நாட்டில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்கக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை நிலவுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் ஏதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களின் ஒரு சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவுபலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.