Friday, March 29, 2024
Home » யாழில் தடை செய்யப்பட்ட வலைகளுடன் ஒருவர் கைது

யாழில் தடை செய்யப்பட்ட வலைகளுடன் ஒருவர் கைது

- 140 கிலோ எடையுள்ள வலைகள் மீட்பு

by Prashahini
October 26, 2023 12:57 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (25) யாழ்.நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்தே தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள வலைகள் மீட்கப்பட்டன.

வலைகள் மீட்கப்பட்டதை அடுத்து, தடை செய்யப்பட்ட வலைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் , மீட்கப்பட்ட வலைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT