Thursday, March 28, 2024
Home » மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் மரணம்

- வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து

by Rizwan Segu Mohideen
October 26, 2023 5:22 pm 0 comment

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று (26) இடம் பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்றில் இருந்து சேருநுவர நோக்கிச் சென்ற கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணிபுரிந்து வரும், ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் வசித்து வரும் 34வயதான, கே. கஜரூபன் என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT