Home » அக்கரைப்பற்றில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய யானை மரணம்!

அக்கரைப்பற்றில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய யானை மரணம்!

- சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று உயிரிழப்பு

by Prashahini
October 26, 2023 11:09 am 0 comment

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் வீதி, இசங்கேணிச்சீமை பிரதேசத்தில் நீர்ப்பாசன கால்வாய்க்குள் காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் காரணமாக வலுக்குறைந்த யானை ஒன்று வீழ்ந்து கடந்த நான்கு நாட்களாக உயிருக்காக போராடியது.

இதனை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மிருக வைத்தியர்கள், அக்கரைப்பற்று பொலிஸார் உட்பட ஏனையோர் குறித்த இடத்துக்கு வருகை தந்து யானையை காப்பாற்றும் முயற்சியில் நான்கு நாட்களாக முயற்சி செய்தும், மருந்து மற்றும் ஊசி கொடுத்தும் அவை பயனளிக்காத நிலையில் குறித்த யானை இன்று (26) காலை உயிரிழந்துள்ளது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT