Friday, March 29, 2024
Home » கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

- அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

by Prashahini
October 26, 2023 10:02 am 0 comment

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினராசா மதுஸன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சடலம் நேற்று (25) இரவு 8.30 மணியளவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ
இடத்திற்கு விரைந்த இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தின் வாய் மற்றும் காதில் இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT