தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று முன்தினம் (23) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது. தனது தாயின் இரத்த மாதிரி அறிக்கையுடன் பாதசாரி கடவையை இப்பெண் கடந்த போது, இவ்விபத்து நிகழ்ந்தது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். சில மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண், இரும்பு வேலியில் மோதிக் கிடந்தார்.