பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்கள், கறுப்புப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் என்றழைக்கப்படும் நிக்லஸ் பிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்களே மேற்படி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களின் பெயரை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்து வர்த்மானியையும் வௌியிட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காகவே இவர்களது பெயர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மேற்படி வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
2355-07_T