Thursday, March 28, 2024
Home » கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் IMF பணிப்பாளருடன் பிரதமர் பேச்சு

கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் IMF பணிப்பாளருடன் பிரதமர் பேச்சு

by sachintha
October 25, 2023 7:03 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு முறையின் முன்னேற்றம், அரசாங்கத்தின் இடைக்கால மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நீண்ட கால திட்டங்களுக்கு தேவையான உதவிகள் குறித்து இதில்,கலந்துரையாடப்பட்டது.

மேலும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரண திட்டங்கள் குறித்தும் இப்பேச்சில் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் பி.கே.ஜி ஹர்ச்சந்திர ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது கடன் தவணை எப்போது கிடைக்கும் என தன்னால் உறுதியாக கூற முடியாதென, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT