Home » ஈச்சிலம்பற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஈச்சிலம்பற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

by Prashahini
October 23, 2023 4:26 pm 0 comment

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய கே.சதீஸ் எனவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:

நேற்று (22) இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும், சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT