Thursday, March 28, 2024
Home » சீரடி சாயி நாதருக்கு நாளை தங்க மகுடாபிஷேக விழா

சீரடி சாயி நாதருக்கு நாளை தங்க மகுடாபிஷேக விழா

25 முதல் 27 வரை ஆன்மீக அருளுரை

by damith
October 23, 2023 8:50 am 0 comment

சீரடி சாயி மத்திய நிலையம் ஸ்ரீலங்கா ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில்,கொழும்பு புதுச்செட்டித்தெருவிலுள்ள சீரடி மந்தீரில் வீற்றிருக்கும் சீரடி சாயிநாதருக்கு தங்க மகுடம் சூட்டப்படவுள்ளது. 54 பவுணில் உருவாக்கப்பட்டு பச்சை மரகதக்கல் பதிக்கப்பட்ட தங்க மகுடம் சூட்டும் விழா நாளை விஜயதசமியன்று நடைபெறவுள்ளது.

விஜய தசமி நன்னாளில், காலை சுபநேரம் 11 மணிக்கு, பக்தர்களின் நன்கொடை காணிக்கையாக இந்த மகுடம் சூட்டப்படவுள்ளது.

அன்று மாலை சித்திரத் தேரோட்டத்துடன், மதிய அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“சீரடி சாயிபாபாவின் அற்புதங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, 25 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை, தினமும் மாலை 06 மணிக்கு, இந்திய தொலைக்காட்சி புகழ் ஆன்மீகப் சொற்பொழிவாளர் திருமதி சௌமீயா அபிஷேக் ராஜு நடத்தவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT