126
அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டம் காரணமாக இவ் வருடத்தின் அக்டோபர் 15 வரையான காலத்தில்,10 இலட்சத்து 66 ஆயிரத்து 651 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வகையில் இம்மாதத்தின் கடந்த 15 தினங்களுக்குள் 50 ஆயிரத்து 395 உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பிரியாணிகளில், இந்தியர்களே அதிகம் வந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரிட்டன் சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தருவதாகவும் அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்