263
பதுளை – கொஸ்லந்தை – மீரியபெத்தையில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.என். பிரியங்கனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, அபாயம் நிலவும் இரண்டு தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 27 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக ஹப்புத்தளை சேர்வுட் தோட்டத்தை சேர்ந்த 27 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. அவர்கள் அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.