சர்வதேச முதியோர் தினம் தொடர்பில் முதியோர் கௌரவிப்பு சிறப்பு நிகழ்வொன்று களுத்துறை மாவட்ட செயலாளர் ஜீ.பீ. ஜனக குமாரவின் பங்களிப்புடன் தொடங்கொட பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் முதியோர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.
சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா, சமூக சேவைகள் மற்றும் முதியோர் செயலக பணிப்பாளர்கள், ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா நிறுவன முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதிக குழந்தைகளை தேசத்துக்கு பெற்றுக் கொடுத்த தேசத்தின் தாய்மைகள் ஆறு பேர் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தேசத்தின் ஆகக்கூடிய நூற்றியொன்பது வயதுக்குட்பட்ட தாயொருவரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.