தென் மாகாணத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக விவசாயிகளினால் நடாத்திவந்த 40 இற்கும் மேற்பட்ட விதைநெல் வயல்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்குத் தேவையான விதை நெல்லினை பெறுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தென் மாகாண விவசாய திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளினால் விதைநெல் வயல்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவை வரட்சி மற்றும் வெள்ள நிலமையின் காரணமாக தற்பொழுது முற்றாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் எதிர்நோக்கியுள்ள பெரும் போகத்திற்குத் தேவையான தரமான விதைநெல்லினை பெறுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்குமுகங்கொடுத்து வருவதோடு போதியளவு விதைநெல் இல்லாமையினால் விதை நெல்லின் விலை அதிகரித்து காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்