Friday, April 19, 2024
Home » மரதங்கடவல கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு வசதி
குவைத் நாட்டின் நிதியுதவியில்

மரதங்கடவல கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு வசதி

by damith
October 23, 2023 6:00 am 0 comment

குவைத் நாட்டின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ, மரதங்கடவல கிராமத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் நளீமியிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அல் ஹிமா பணிப்பாளரின் பங்குபற்றலுடன் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கிராமத்தில் சுமார் 450இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ள பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கெக்கிராவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரபீக் ஆசிரியர், அல் ஹிமா அமைப்பின் வட மத்திய மாகாண இணைப்பாளர் உவைஸ், பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(திறப்பனை தினகரன், - கெக்கிராவ குரூப் நிருபர்கள்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT