Home » துப்பாக்கிச் சூட்டில் தம்பதியும் 4 மாதக் குழந்தையும் காயம்

துப்பாக்கிச் சூட்டில் தம்பதியும் 4 மாதக் குழந்தையும் காயம்

- குழந்தையின் காலில் துப்பாக்கிச் சூடு

by Rizwan Segu Mohideen
October 22, 2023 2:19 pm 0 comment

அஹுங்கல்ல, கல்வெஹர பாடசாலைக்கு அருகில் நேற்று (21) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியரும் நான்கு மாதக் குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த குழந்தை மற்றும் தாயார் காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையிலும், பெண்ணின் கணவர் பலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வெஹர, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மரக்கடை வர்த்தகர் (32) மற்றும் அவரது மனைவி (28) மற்றும் 4 மாத ஆண் குழந்தை ஆகியோரே இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தையின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மரக்கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது மறைந்திருந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 21 வெற்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ரி-56 துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகயை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT