Thursday, April 25, 2024
Home » கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது

கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது

- கொள்ளையடித்த தங்கச்சங்கிலி, தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீட்பு

by Prashahini
October 20, 2023 1:09 pm 0 comment

பெண் ஒருவருடைய கழுத்திலிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்கச் சங்கிலியொன்றினை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் இருவரை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலன்பிந்துனுவெவ கல்குளம் பிரதான வீதியில் நேற்று (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் கொள்ளையடித்த தங்கச்சங்கிலியையும், கொள்ளையர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளையும் சிவலாகுளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்கள் இருவரும் அநுராதபுரம் களத்தேவ பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட 29, 33 வயதுடயவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் சிவலாகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT