Thursday, March 28, 2024
Home » எம்பிலிபிட்டியவில் தடம் பதிக்கும் சியபத பினான்ஸ்

எம்பிலிபிட்டியவில் தடம் பதிக்கும் சியபத பினான்ஸ்

by Rizwan Segu Mohideen
October 19, 2023 1:39 pm 0 comment

நிதிச் சேவைகளில் நம்பகமான பெயரான சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை மக்களுக்கு இணையற்ற நிதி சேவைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் விரிவுபடுத்தி, அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் தனது மற்றுமொரு கிளையை திறந்தது.

எம்பிலிப்பிட்டிய பல்லேகம பிரதான வீதியில் இல. 74 இல் அமைந்துள்ள புதிய கிளையானது 2023 செப்டெம்பர் 5 ஆம் திகதி பிரதம அதிதிகளான சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைவர் சுமித் குமாரதுங்க அவர்கள்இ சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சுதத் மாரசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

எம்பிலிப்பிட்டிய கிளையானது சியபத பினான்ஸின் நாடளாவிய கிளை வலையமைப்பில் இணைத்துக்கொண்ட 45 ஆவது கிளையாகும். சியபத பினான்ஸ் பிஎல்சி எம்பிலிப்பிட்டிய பிராந்தியத்தில் உள்ளூர் வர்த்தகம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு ஆதரவளித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு தனது பங்கினை ஆற்றி வருகின்றது. குத்தகை, நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், தங்கக் கடன் வசதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், வாடகை கொள்முதல்; மற்றும் பிரதிநிதிச் சேவைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை உள்ளடக்கி இக் கிளை தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க உள்ளது. சியபத பினான்ஸ் பிஎல்சி உள்;ர் வணிகங்கள் மற்றும் தனிநபர்களை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், மேலும் இந்த புதிய கிளை அவர்களின் நிதி அபிலாஷைகளை நிறைவேற்றும் உந்துசக்தியாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன அவர்கள் தனது உரையில், “நாடு முழுவதும் சியபத பினான்ஸின் தொடர்ச்சியான விரிவாக்கம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அத்தோடு எங்கள் வலையமைப்பில் மற்றுமொரு கிளை இணைந்துள்ளமை எங்களின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மேலும் பரந்தளவிலான நிதிச் சேவைகளை வழங்க எங்களுக்கு உதவிடும்.

அனைவருக்குமாக வளர்ச்சியை எளிதாக்குதல், அணுகல்தன்மையை மேம்படுத்துதல் மற்றும்; நிதி வெற்றியை ஊக்குவித்தல் போன்றவையே எங்கள் அர்ப்பணிப்பின் நோக்கமாகும். எம்பிலிப்பிட்டிய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையும் என நாங்கள் கருதுகின்றோம்.” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான வரலாற்றைக் கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதித் தேவையினை பூர்த்தி செய்வதிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. சியபத பினான்ஸ் நிறுவனம் தனது நிதிச் சேவைகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான இடைவிடாத அர்ப்பணிப்பு, வணிக அபிலாஷைகளைப் பின்தொடர்வதில் சமூகங்களை எளிதாக்குவதற்கான உண்மையான விருப்பத்தில் வேரூன்றியுள்ளது. நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், குத்தகை, வாடகை கொள்முதல், தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், சுழலும் கடன்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதி சேவைகள் உள்ளடக்கிய பல்வேறு மற்றும் விரிவான தயாரிப்புக்களை நிறுவனம் வழங்குகிறது.

சியபத பினான்ஸ் பிஎல்சி, செழிப்பான நிதி வளம் நோக்கிய தனது இந்தப் பயணத்தின் கொண்டாட்டத்தில் இணையுமாறு எம்பிலிப்பிட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைவரையும் அழைக்கின்றது. சியபத பினான்ஸ் மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.siyapatha.lk எனும் இணையதளத்தை பார்வையிடவும் அல்லது 0477 605 625 என்ற இலக்கத்துடன் எம்பிலிப்பிட்டிய கிளையை தொடர்பு கொள்ளவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT