Friday, April 19, 2024
Home » ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

- நுரையீரலில் ஏற்பட்ட இரத்த கசிவே மரணத்திற்கு காரணம்

by Prashahini
October 19, 2023 12:18 pm 0 comment

காசல் மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று (18) உயிரிழந்தது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உபகரணங்களோ, மருந்துகளோ தட்டுப்பாடு இன்றி எங்களால் இவற்றைச் செய்ய முடிந்துள்ளது. ஆனால் இது ஒரு பெரிய சவால். இந்த ஆறு குழந்தைகளும் 26 வாரங்களில் பிறந்தன. குழந்தைகள் 400-700 கிராம் எடையில் உள்ளன. அத்தகைய குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவ ஊழியர்களான எங்களுக்கு பெரிய சவாலான போதிலும் நாங்கள் அதை கவனமாக கையாள்கிறோம் என விசேட வைத்தியர் டொக்டர் சமன் குமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT