Tuesday, April 16, 2024
Home » மின் கட்டண உயர்வு மக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

மின் கட்டண உயர்வு மக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

by gayan
October 19, 2023 7:20 am 0 comment

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான பொது கலந்தாய்வு நேற்றுக் காலை 09 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபை உட்பட 30 தரப்பினருடன் கலந்தாலோசித்ததாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள தரவுகள், இலங்கையின் நிலைமைக்கு ஒத்துப் போகவில்லையென PUCSL இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாடுக்ள சங்கம் PUCSL க்கு ஆவணம் ஒன்றை கையளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் கூறுகையில், மின்சார சபை தற்போது 22% இயக்க இழப்பை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT