249
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கமூடாக முறையிட முடியுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினூடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தகவல் அளிப்பவரின்
அடையாளத்தை அறிவிக்காமல் இந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.
நாட்டின் எந்த பகுதியில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் இந்த இலக்கத்தின் ஊடாக வழங்க முடியும்.