Friday, March 29, 2024
Home » அட்டாளைச்சேனை அக்-அந்நூர் ம.வியில் பணிநயப்பு விழா, ஆசிரியர் தின நிகழ்வு

அட்டாளைச்சேனை அக்-அந்நூர் ம.வியில் பணிநயப்பு விழா, ஆசிரியர் தின நிகழ்வு

by gayan
October 19, 2023 5:16 pm 0 comment

பணிநயப்பு விழாவும், ஆசிரியர்தின நிகழ்வும் அட்டாளைச்சேனை அக்- அந்நூர் மகாவித்தியாலயத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றன. பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி த​ைலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களினால் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் நடந்தேறின.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறும் பிரதி அதிபர் எஸ்.எம்.ஹனீபாவை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த பணிநயப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம். றஹ்மத்துல்லா, சிறப்பு அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏஎம்.நெளபர்டீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

அக் / அந்நூர் மகாவித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்களினால் பிரதி அதிபர் எஸ்.எம்.ஹனிபாவுக்கான மிகப்பெரிய கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது. ஆசிரியச் சமூகத்தினால் பொற்கிளி வழங்கப்பட்டது. அத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றினால் அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எஸ்.றஹீம் (பொதுச்சுகாதார பரிசோதகர்) மற்றும் அதிபரும், உறுப்பினருமான எம்.ஐ.எம்.றியாஸ், எஸ்.எம்.இத்ரீஸ், எம்.பி.கியாஸ், றிம்சான் புகாரி ஆகியோருடன் பழைய மாணவர் சங்க செயலாளர் றிசாத் ஏ காதர் உட்பட பலரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT