யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சுமார் ஒரு (01) கிலோவுக்கும் அதிகமான
அதி சக்திவாய்ந்த TNT வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறை பகுதியில் நேற்று (17) வடக்கு கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் அப்பகுதிக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பி ல் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பொதியில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ (01) 950) கிராம் அதி சக்திவாய்ந்த TNT வெடிமருந்துடன் சுமார் மூன்றடி (03) நான்கு அங்குலங்கள் (04) கொண்ட சேவை நூலையும் கடற்படையினர் கைப்பற்றினர். வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக, இந்த அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வெடிபொருட்கள் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.