Friday, March 29, 2024
Home » ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில். ரூபாவை ஒதுக்கவும்

ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில். ரூபாவை ஒதுக்கவும்

தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை

by mahesh
October 18, 2023 9:55 am 0 comment

2024 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலிருந்து நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் கோருவது பொதுவான நடைமுறையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் பொருத்தமான காலத்தில் நடத்தப்படும் என்றும் அந்த காலத்துக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமென்றும் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலை சரியான நேரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விவகாரங்களில் என்ன நடக்கும் என்பதை அவர்களால் கணிக்க முடியாதென்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT